தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்தவகையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக பாஜகவிற்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவிற்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதியும் , மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த இரு கட்சிகளும் மற்ற கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் பாமகவிற்கு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மாம்பலம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.