தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்றுதான் தேர்தல் பிரச்சாரத்திற்கு கடைசி நாள் என்பதால் அணைத்து கட்சிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியதால், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தன்னால் மக்களிடம் வாக்கு கேட்க முடிவதாகவும் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்தார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.