தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மதுரை:-
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆக.5-ம் தேதி இறுதி விசாரணை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013-ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை அவ்வப்போது நடைபெற்றுவரும் நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெற உள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த இறுதி விசாரணை முடிந்த பின்பு அதனை அடுத்து ஒரு சில நாட்களில் தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.