அரசியல்

கன்னியாகுமரி பகுதியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும்; விஜய் வசந்த !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையை வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இதனையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில்  கன்னியாகுமரி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் திமுக தலைவர் ஸ்டாலின் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,”கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தான் முதற்கண் நோக்கமாக உள்ளது. எனது  தந்தையால் முன் மொழியப்பட்ட பல திட்டங்களை நிறைவேற்ற செயல்படுவேன்.

கடல் சீற்றம் அதிகமாக உள்ள நேரங்களில் காணாமல் போகும் மீனவர்களை எளிதில் கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் எனவும் கூறினார்.


Share
ALSO READ  அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகல்-கருணாஸ் பேட்டி !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டம்… ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!

naveen santhakumar

நீதி மய்யம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு:

naveen santhakumar

காமராஜரின் நெருங்கிய நண்பர் துளசி அய்யா வாண்டையார் காலமானார் ! 

News Editor