தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தற்காலிக சபாநாயகராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட கு.பிச்சாண்டி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 16 வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இன்று பதவி ஏற்றுக் கொண்டேன். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நாளை பதவி ஏற்பு செய்து வைக்க உள்ளேன். நிரந்தர சபாநாயகர் யார் என்பதை கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் உடல் நலம் பெற்று வந்த பின்னர் அவர்களுக்கான பதவி ஏற்பு நிகழ்வு தனியாக நடத்தப்படும் என கூறினார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.