தமிழகத்தில் இந்தாண்டு சட்ட மன்ற தேர்தல் நடக்கவுள்ளதை தொடர்ந்து ஆளும் கட்சி உட்பட பல காட்சிகள் தங்களின் பரப்புரைகளை தொடங்கியுள்ளனர். அதனால் தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. வரும் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக களமிறங்கவுள்ள நிலையில், அக்கட்சியின் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம்- ஆம் ஆத்மி இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் நீதி மையம் கட்சியின் ஆண்டு விழா வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மக்கள் நீதி மையம் கட்சி ஆண்டு விழாவில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது.