காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம் பி யுமான துளசி அய்யா வாண்டையார்(94) இன்று காலமானார்.
தஞ்சை மாவட்டம் பூண்டியில் பிறந்த இவர் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்துள்ளார். அதனையடுத்து 1996 முதல் 2001 வரை தந்தை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.
மக்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியை முழுவதும் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் தஞ்சாவூர் தொகுதியில் பல பள்ளிகளுக்கு புதிய கட்டிடத்தை கட்டி உள்ளார்.மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் நெருங்கிய நண்பரான இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர் வயது மூப்பின் காரணமாக இன்று உயிர் இருந்தால் அவரின் உடல் சொந்த ஊரான பூண்டிக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு நடைபெற உள்ளது இவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.