தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என தீவிரமாக இயங்கி வருகிறது. அதிமுக சார்பாக கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அத்தொகுதியின் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழக முதல்வரின் தாயார் பற்றி அநாகரிகமாக பேசும் திமுகவினர், ஆட்சிக்கு வந்தால் பெண்கள் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி சிறப்பாக செயல்பட்டதால் தான் மக்களிடம் எங்களால் வாக்கு கேட்க முடிகிறது என்று கூறினார்.
#TamilNadu #TamilThisai #ADMK #DMK #PMK #CONGRESS #BJP #TAMILNADUBJP #PoliticalUpdate #Stalin #Araja #MRvijayabaskar