தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
குடியுரிமை திருத்த சட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மக்களின் சந்தேகங்களை போக்க அக்கட்சி பிரசாரம் மேற்கொண்டு உள்ளது.
இதையடுத்து நாக்பூரில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வீடு, வீடாக சென்று இஸ்லாமிர்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விளக்கம் அளித்தார். பின் அவர், மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரை நாட்டில் இருந்து வெளியேற்ற விரும்பினார். தற்போது மஹாராஷ்டிராவில் அமைந்துள்ள அரசாங்கம் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கருத்தியல் ஒற்றுமை இல்லாததால், அந்த கூட்டணி அரசாங்கம் நீடிப்பது கடினம் எனவும் கூறினார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.