தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
திருக்கோயில்களுக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக மரத்திலான சாய்வுத்தளங்களை அமைத்திடவும், சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்யவும் முதுநிலை திருக்கோயில்களின் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவிழா காலங்களிலும் கூட்டமான நேரங்களிலும் கோவிலுக்கு வரும் முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் சாமி தரிசனம் செய்ய முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாக வருகிறார்கள்.
இதனால் 48 திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக திருக்கோயில்களின் வளாகத்தில் மரத்தினாலான சாய்வுத்தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.