அரசியல்

முதல்வர் கொரோனா காலத்தில் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினார்; அன்புமணி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கி வருகிறது.  அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில், தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

ALSO READ  'RRR' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு; கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்..! 

அப்போது பேசிய அவர் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1,500ரூபாய் நிதியுதவி, ஆண்டுக்கு ஆறு எரிவாயு சிலிண்டர்கள், விவசாயிகளுக்கு மானியம், கல்வி கடன் ரத்து போன்ற திட்டங்கள் பொதுமக்களுக்கு பயன் தரக்கூடியவை என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில் கொரோனா காலக்கட்டத்தில், உலகம் முழுவதும் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் தவித்த போது முதல்வர் பழனிச்சாமி பொது மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினார் என தெரிவித்தார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 9ம் தேதி வரை நடத்த முடிவு

Admin

கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி..!

News Editor

“ரஜினி, கமல், விஜய்” போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது : சீமான் பரபரப்பு பேட்டி  

News Editor