தஞ்சாவூர்:
திருவிடைமருதூர் அருகேன் ஆடுதுறை அடுத்த மருத்துவ குடியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். இவர் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவராக உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ம.க.ஸ்டாலினை மர்ம கும்பல் கொலை செய்வதற்காக வந்தபோது போலீசார் அந்த கும்பலை பிடித்தனர்.
இந்த கொலை திட்டத்துக்கு, தலைவனாக செயல்பட்ட பிரபல ரவுடி லாலி மணிகண்டனை போலீசார் கடந்த 24 நம் தேதி திருவிடைமருதூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.
போலீசாரிடம், ம.க.ஸ்டாலினை கொலை செய்வதற்கு பாமக மாநில துணை செயலாளரும், கும்பகோணத்தை அடுத்த கொத்தங்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பாமக மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கட்ராமன்(42) உடந்தையாக இருந்ததாக லாலி மணிகண்டன் கூறினார்.
இதனையடுத்து திருவிடைமருதூர் போலீசார் வெங்கட்ராமன் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
வன்னியர் சங்க மாநில துணைத் தலைவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் பாமக மாநில துணை பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.