அரசியல்

‘ஒன்றிணைந்து செயல்படுவோம்’ மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (2.5.2021) காலை  8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு இ.வி.எம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான அதிமுக கூட்டணி 78 சட்டமன்ற தொகுதிகளிலும், ,ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 156 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.  இதன் மூலம் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் வலது தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பிரமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தமிழக முதமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் ஒன்றிணைந்து செயல்படுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை; அ.ராசா விளக்கம் !

அதேபோல,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வேட்புமனு தாக்கல்  !

News Editor

அப்பாவின் கனவை நிறைவேற்ற குமரியில் விருப்பமனு தாக்கல் !

News Editor

முதல்வர் தாய் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு; அ.ராசாவுக்கு வலுக்கும் கண்டனம் !

News Editor