தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவக்கியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தங்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் தமிழகத்தில் தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை அண்மையில் மேற்கொண்டிருந்தார் ராகுல் காந்தி.
அப்போது, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களுக்கு சென்றார். அங்கு அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இது தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நல்ல உற்சாகத்தை அளித்தது.
இதையடுத்து வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்ட பயணமாக ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அவரின் தமிழக வருகை மார்ச் முதல் வாரத்திற்கு தள்ளிப்போகியுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.