தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் சட்ட மன்ற தேர்தல் வரவுள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் தங்களின் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளரான சைதை துரைசாமி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். கொத்தவால்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேசிய அவர், சாதி, மத அரசியலை கடந்து சைதாப்பேட்டை தொகுதி மக்கள் தன்னை குடும்பத்தில் ஒருவனாக பார்ப்பதாக குறிப்பிட்டார். மனிதநேய சிந்தனையோடு தான் பணியாற்றி வருவது இப்பகுதி மக்களுக்கு தெரியும் என்று கூறிய சைதை துரைசாமி எந்த வேறுபாடும் இன்றி மக்கள் தன்னை ஆதரிக்கிறார்கள் எனக் கூறினார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.