தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என தீவிரமாக இயங்கி வருகிறது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பின்பு ஆயிரம் விளக்கு தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மக்கள் மத்தியில் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், தொகுதியில் குடிநீர் பிரச்னை, பாதாள சாக்கடை பிரச்னை, வீட்டுமனை பட்டா இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகவும், சாலைகள் சேதமடைந்து இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த அனைத்து பிரச்னைகளையும் தாம் வெற்றி பெற்ற பிறகு தீர்த்து வைப்பதாகவும் குஷ்பு தெரிவித்தார்.