சென்னை:-
16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த 21-ஆம் தேதி ளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது.
ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது கொரோனாவை கட்டுப்படுத்தியதில் அதிமுக சிறப்பாகச் செயல்பட்டதாகவும், தற்போது திமுக அரசு அவ்வாறு செயல்படவில்லை என்றும் தெரிவித்தார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விஷயங்களை ஏன் நிறைவேற்றவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
இறுதியாக, திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகளும், புதிய திட்டங்களும் ஏதும் இல்லை.
யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே என்பார்கள்; ஆனால் ஆளுநா் உரையில் யானையும் இல்லை மணியோசையும் இல்லை; வெறும் வெற்று அறிக்கையாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் திமுக யாருக்கும் அடங்கிய யானை இல்லை; யாராலும் அடக்கமுடியாத யானை; அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்கமுடியாத யானை.
யானைக்கு 4 கால்கள் தான் பலம். அதுபோல திமுகவுக்கு சமூகநீதி, மொழிப்பற்று, சுயமரியாதை, மாநில உரிமை போன்ற 4 கொள்கைகள் தான் பலம் என்று பதிலளித்தார்.
மேலும், ஆளுநர் உரை டிரெய்லர் தான் எனவும் அரசின் ஐந்தாண்டு திட்டங்கள், கொள்கைகள், நோக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது எனவும் குறிப்பிட்டார்.