குடியுரிமை திருத்த சட்டம் அசாமில் நடைமுறைப்படுத்தும் வகையில், 3,000 பேரை அடைத்து வைக்கும் வகையில் ரூ.46 கோடி மதிப்பில் தடுப்பு மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்து வரும் மார்ச்சில் திறந்து நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் இன்று நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் மத்திய பாஜ அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன.
கடந்த 22ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ‘இந்தியாவில் தடுப்புக்காவல் முகாம்கள் எதுவும் இல்லை’ என்றார். இவரது பேச்சு டெல்லி அரசியலில் புயலை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் பிரதமர் மோடி பல இடங்களில் பொய் சொல்வதாக கூறி குற்றம்சாட்டி வருகின்றன. குடியுரிமை சட்டம் அமல்படுத்தும் போது, மேற்கண்ட விதிகளுக்கு அப்பாற்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தடுப்பு மையத்தில் அடைத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.