தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழக அரசின் கீழ் புதிதாக இயற்கை வளத்துறை உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் புதிதாக இயற்கை வளத்துறை என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய துறையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்காணிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புவியியல், சுரங்கத்துறை இயக்குநரகம், கனிமவள நிறுவனம் ஆகியவை இயற்கை வனத்துறையின் கிழ் செயல்படும் என்றும், துறைக்குத் தேவையான விதிகள், அறிவுறுத்தல்கள் மனித வளத்துறையிடம் இருந்து வழங்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.