அரசியல்

வாக்கு எண்ணிகையில் பின்னடைவு; கோவை சென்ற கமல்ஹாசன் !  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகம், அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (2.5.2021) காலை  8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு இ.வி.எம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

ALSO READ  முன்னாள் IAS அதிகாரி மக்கள் நீதி மையத்தில் இணைந்தார்…..

தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான அதிமுக கூட்டணி 96 சட்டமன்ற தொகுதிகளிலும்  ,ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 132 சட்டமன்ற தொகுதிகளிலும், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணி 1 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் சென்னையில் இருந்து கோவைக்கு சென்றுள்ளார். இவர் போட்டியிடும் தொகுதியில் மும்முனை போட்டி நிகழ்கிறது.

ALSO READ  சட்டசபையில் ஒலித்த "Go Back Governor" கோஷம்

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மயூரா எஸ்.ஜெயக்குமார் 4,409 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன் 4,293 வாக்குகள் பெற்று பின்னடைவு சந்தித்துள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன் 2,900 வாக்குகள் பெற்று கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் மீது ராகுல் காந்தி தொடர் அட்டாக் டாக்

Admin

பாஜகவில் இணையும் நடிகர் சிவாஜியின் மகன் !

News Editor

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இன்று தாக்கல்

Admin