தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சி பொறுப்பில் இருந்த அதிமுக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 69 தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளன.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்று தேர்ந்தெடுக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தற்போது தொடக்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர், கொறடா போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ், வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன் கே.பி.முனுசாமி, வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.