ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இணையானதாக கருதப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கியது.
இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்- ஆஸ்திரியாவின் தோமினிக் திம் ஆகியோர் இன்று பலப்பரீட்சை நடத்தினர்.
இதில் ஜோகோவிச் முதல் சுற்றை அவருக்கு 6-4 என்ற கணக்கில் கைப்பற்ற, சுதாரித்துக்கொண்ட டோமினிக் தீம் 2வது சுற்றை 6-4 என்ற கணக்கிலும், 3வது சுற்றை 6-2 என எளிதாக கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
நாலாவது செட்டை கைப்பற்றினால் சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய டொமினிக் தீமுக்கு, ஜோகோவிச் கடும் சவாலாக அமைந்தார். அபார ஆட்டத்தால் ஜோகோவிச் 4வது சுற்றை 6-3 என்ற கணக்கிலும், 5வது சுற்றை 6-4 என்ற கணக்கிலும் கைப்பற்ற ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.