இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இதனிடையே இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இன்றைய போட்டியில் தோற்றால் இந்திய அணி தொடரை இழந்து விடும். எனவே இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.கடந்த ஆட்டத்தை பொறுத்தவரை இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு படு சொதப்பலாக இருந்தது.
அதேசமயம் பேட்டிங் ஆர்டரில் செய்யப்பட்ட மாற்றம் இத்தகைய பயனையும் தரவில்லை. மேலும் இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் விளையாடமாட்டார் என்பதால் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.
முதல் வெற்றியைப் பெற இந்திய அணியும், தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணியும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.