தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஐக்கிய அமீரகத்தில் நடந்துவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்கி துபாயில் நடைபெற்று வருகிறது. இன்று (22/9/2021) நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்கிறது. இந்நிலையில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது எனவே இன்றைய போட்டி நடப்பதில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் திட்டமிட்டபடி இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. நடராஜனுக்கு கோரோனா உறுதியானதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்த வீரர்கள் விஜய் சங்கர்,பெரியசாமி கணேசன்,அணி நிர்வாகி விஜயகுமார், மருத்துவர் அஞ்சனா வாணன், பிசியோதெரபிஸ்ட் ஷியாம் சுந்தர், தளவாட மேலாளர் துஷார் கேட்கர் என 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.