நியூசிலாந்து அணியை எதிர்கொள்வது அவ்வளவு சுலபமானது அல்ல என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தற்சமயம் இலங்கையுடனான 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இதற்குப் பிறகு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டி மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி வீரரும், தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நியூசிலாந்து நாட்டிற்கு சென்று விளையாடுவது அவ்வளவு சுலபமானது இல்லை எனவும், அங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் நியூசிலாந்து அணியில் உள்ள தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களை எதிர்த்து சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நம்மை மாற்றி கொள்வது கடினம் என ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.