விளையாட்டு

போராடி தோற்ற தென்னாப்பிரிக்கா.. பந்துவீச்சில் அசத்திய இங்கிலாந்து

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென்னாப்பிரிக்கா அணியுடனான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2வது போட்டி டர்பன் நகரில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டிற்கு 204 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் தென்னாப்பிரிக்காவின் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ALSO READ  ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

இதனைத்தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் கேப்டன் குயின் டி காக் (65 ரன்கள்) அதிரடியாக விளையாடியும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இங்கிலாந்து அணியில் டாம் கரண், ஜோர்டான், மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ALSO READ  உலக தடகள சாம்பியன்ஷிப் -இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளி வென்றார்

இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளன. 3வது போட்டி பிப்ரவரி 16ம் தேதி செஞ்சூரியனில் நடைபெறுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய நிகழ்த்திய வரலாற்று சாதனை; 32 ஆண்டுகளுக்கு பிறகு பிரிஸ்பேனில் மண்ணை கவ்வியது ஆஸ்திரேலிய..!

News Editor

10 ஆண்டுகளில் அசைக்க முடியாத வீரராக மாறிய விராட் கோலி

Admin

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம்

naveen santhakumar