2020ம் ஆண்டிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சாதனை படைகள் தயாராகி வருகிறார்.
இந்திய அணியின் கேப்டனும் ரசிகர்களால் செல்லமாக ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி ஏராளமான சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறார். இலங்கை அணியுடனான தொடரில் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல் ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டியில் அவர் மற்றொரு சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடித்துள்ளார் அதில் 20 சதங்கள் இந்திய மண்ணில் அடிக்கப்பட்ட வை. சச்சின் படைத்த பல சாதனைகளை விராட் கோலி ஒவ்வொன்றாக முறியடித்து வருகிறார்.
அந்த வகையில் இன்னும் ஒரு சதம் அடித்தால் இந்திய மண்ணில் அதிக சதம் எடுத்த சச்சினின் சாதனையை அவர் சமன் செய்வார். எனவே ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் அவர் சதம் அடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். தற்போது 43 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி அதில் 19 சதங்களை இந்திய மண்ணில் எடுத்துள்ளார்.
ஆனால் இந்த தொடரில் விராட் கோலி நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்பதால் அவர் சதம் அடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.