இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் 3வது போட்டி மவுண்ட் மவுனுங்காயில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் எப்படியாவது ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்புவதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
அதேசமயம் டி20 போட்டியில் கோட்டை விட்ட நியூசிலாந்து அணி சுதாரித்துக்கொண்டு ஒருநாள் போட்டிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது.
2 அணிகளிலும் நாளைய போட்டிகளில் மாற்றங்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை வென்று ஒயிட்வாஷ் செய்ய நியூசிலாந்து தயாராகி வருகிறது. தோல்விகளுக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்பது இன்றைய போட்டியில் தெரியும்.