தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
31 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்து மோசமான சாதனை படைத்துள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது.
இந்த தோல்வி மூலம் 31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது.
1989ம் ஆண்டில் மேற்கிந்திய அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி ஒருநாள் தொடரை முழுமையாக இழந்து ஒயிட்வாஷ் ஆனது.
அதன்பிறகு தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக இழந்து பழைய சாதனையை மீண்டும் படைத்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.