விளையாட்டு

5வது போட்டியிலும் வெற்றி பெற்று கெத்து காட்டிய இந்திய அணி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 5வது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது.

பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டார். நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

முதலில் பேட்டிங் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் (45 ரன்கள்), ரோகித் சர்மா (60 ரன்கள்), ஸ்ரேயாஸ் ஐயர் (33 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 163 ரன்களை எடுத்தது.நியூசிலாந்து அணி தரப்பில் ஸ்காட் குஜ்ஜெலீன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ALSO READ  இன்று 2வது ஒருநாள் போட்டி:ஆஸ்திரேலியாவை வீழ்த்த தயாராகும் இந்திய அணி

இதனைத்தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் ஆறுதல் வெற்றியாவது கிடைக்கும் என்று நினைத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி கனவை இந்திய அணி பந்து வீச்சாளர்கள் நொறுக்கினர்.

அந்த அணி 17 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் டிம் செய்ஃபர்ட் 50 ரன்களும், ராஸ் டெய்லர் 53 ரன்கள் எடுத்தாலும் நியூசிலாந்து அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

ALSO READ  தமிழ்ப் பாடலுக்கு டிக்டாக் செய்த கெவின் பீட்டர்சன்...

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் முழுவதும் வென்று நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடைபெற்றார் லசித் மலிங்கா..!

Admin

வருடத்திற்கு 208.56 கோடி சம்பாதிக்கும் வீரர்

News Editor

டி20 போட்டி தொடர்: இந்தியா- இலங்கை இன்று பலப்பரீட்சை

Admin