நியூசிலாந்து அணியுடனான போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது குறித்து பிசிசிஐயிடம் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான வீரர்கள் பட்டியலில் பண்ட், இஷான் கிஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனாலும் நியூசிலாந்து அணி உடனான போட்டியில் அவர் சேர்க்கப்படவில்லை. இதனால் ரிஷப் பன்ட்-ஐ காக்கும் பிசிசிஐ, ஏன் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பை மறுக்கிறது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல் மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்படாதது குறித்தும் கேள்வி எழுப்புகின்றனர்.
இதனிடையே தான் விக்கெட் கீப்பராக இல்லாவிட்டாலும், நன்றாக பீல்டிங்கும் செய்வேன் என்று பிசிசிஐ-க்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கும் வகையில் சஞ்சு சாம்சன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.