தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இந்தியாவில் கொரோனார் வைரஸின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கத்தை உணர்ந்த பிசிசிஐ இந்தியாவில் நடைபெற்று வந்த இ.பி.எல் போட்டியை ரத்து செய்தது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதில் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இலங்கையில் இந்திய அணி ஜூலை 13 முதல் ஜூலை 27 வரை விளையாட உள்ளது.
இதனிடையே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இங்கிலாந்து அணியுடன் பயணிப்பதால் இலங்கை தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயற்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டிராவிட்டின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
ராகுல் டிராவிட் இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.