பெங்களூர் அணியில் விளையாடும் கேப்டன் விராட் கோலிக்கு சுதந்திரம் கொடுங்கள் என முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் 12 ஆண்டுகளாக விளையாடி வரும் அணிகளில் ஒன்று ‘ராயல் சேலஞ்சர்ஸ்பெங்களூர்’. இந்த அணி தற்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைமையில் விளையாடி வருகிறது.
உலகின் தலைசிறந்த கேப்டன் என பெயர் பெற்ற விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. அதேசமயம் இந்த முறை அந்த அணியின் லோகோ மாற்றப்பட்டுள்ளது.
இதுபற்றி அணியின் முன்னாள் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், புதிய லோகோ நன்றாக இருப்பதாகவும், கேப்டன் விராட் கோலிக்கு சுதந்திரம் கொடுங்கள். பெங்களூர் அணி கோப்பையை எப்போது வெல்லும் என ரசிகர்கள் ஆவலாக காத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதிய லோகோ மாற்றம் தங்களுக்கு சாதகமாக அமையும் என பெங்களூர் அணி நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.