பெண்கள் உலகக்கோப்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
2020ம் ஆண்டுக்கான 20 ஓவர் பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் இன்று தொடங்கின. சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் தீப்தி சர்மா 49 ரன்கள் விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஜெஸ் ஜோனாசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் Alyssa Healy 51 ரன்களும், Ashleigh Gardner 34 ரன்கள் எடுத்துமே அந்த அணி தோல்வியை தழுவியது.
பந்துவீச்சில் இந்தியாவின் பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டெ 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றது. இந்திய அணி அடுத்ததாக 24ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.