நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்தியா நிதானமாக விளையாடி வருகிறது.
கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெல்லிங்டனில் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 165 ரன்களும், நியூசிலாந்து அணி 348 ரன்களும் எடுத்தன.
இதனைத்தொடர்ந்து 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே நிதானத்தை கடைபிடித்தது. தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 58 ரன்கள் எடுத்தார். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே 25 ரன்களுடனும், விகாரி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி நியூசிலாந்தை விட 39 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில் 4ம் நாள் ஆட்டம் இன்று தொடங்குகிறது.
இதில் சவாலான இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்து தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடும் என்பதால் எஞ்சிய 2 நாள் ஆட்டமும் விறுவிறுப்பாக அமைய உள்ளது.