இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்தாண்டு இவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்பாக பேட்ஸ்மேன்களுக்கு வார்னிங் கொடுத்தார்.
ட்விட்டரில் ரசிகர்கள் அஸ்வினிடம் கேட்ட கேள்விக்கு கிரீஸைவிட்டு யார் வெளியேறினாலும் அவுட் செய்வேன் என அஸ்வின் பதில் அளித்திருந்தார். இதைப் பார்த்து செம்ம காண்டான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், அஸ்வினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது அதிகாரப்பூர்வ பதிவில், “ஐபிஎல் 2020க்காக இந்த பந்தை யார் தனது கார்ட்டில் வைத்துள்ளார் என்பதை சொல்லித் தெரிய தேவையில்லை” என குறிப்பிட்டுள்ளது.
Rajasthan Royals✔@rajasthanroyals
No points for guessing who is adding this to their cart for #IPL2020 https://twitter.com/yashozilrane/status/1211997287079010304 …Yash Rane@yashozilraneReplying to @ashwinravi99 @SaravanElangoMy gift to Ashwin this Christmas6737:36 PM – Dec 31, 2019Twitter Ads info and privacy59 people are talking about this
அஸ்வின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுப்பாரா அல்லது ஐபிஎல் களத்தில் கடந்த ஆண்டை போல மான்கட் முறையில் பதிலடி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.