சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கோவிட் வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்க, பரிந்துரைக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் எடுத்தேன். இருப்பினும், எனக்கு ஏற்பட்ட லேசான அறிகுறிகளைத் தொடர்ந்து நான் இன்று (27.03.2021) சோதனை மேற்கொண்டதில், கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனது வீட்டில் வேறு யாரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை. எனது மருத்துவர்கள் அறிவுறுத்தியபடி, நான் வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனக்கு ஆதரவளித்த அனைத்து சுகாதார நிபுணர்களுக்கும், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். அனைவரும் கவனமாக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
#sachin #corona #coronavirus #covid19 #TamilThisai #coronapositivecases #coronaupdate