டெல்லி:-
இங்கிலாந்து தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திலேயே இருக்கிறது.
இந்நிலையில், 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் 2 பேரும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்களில் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரரின் பெயர் தெரிவிக்கப்படாத நிலையில் அவருக்கு டெல்டா வகை தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது
ஏற்கனவே இங்கிலாந்து அணி வீரர்கள் 3 பேர் உட்பட ஏழு பேருக்கு கொரோனாஉறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இந்திய வீரருக்கு தற்போது கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா எழுதிய கடிதத்தில், கோவிஷீல்ட் பாதுகாப்பை மட்டுமே வழங்குவதால், நெரிசலான இடங்களை ‘தவிர்க்க’ வேண்டும் என வீரர்களிடம் கூறினார், வைரஸுக்கு எதிரான முழு நோய் எதிர்ப்பு சக்தியை இன்னும் பெறவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், ஷாவின் கடிதம் குறிப்பாக விம்பிள்டன் மற்றும் யூரோ சாம்பியன்ஷிப்பிற்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது, இந்த போட்டிகள் சமீபத்தில் அங்கு முடிந்தது குறிப்பிடத்தக்கது.