விளையாட்டு

U14 கிரிக்கெட்டில் 295 ரன்களை குவித்த ராகுல் டிராவிட்டின் மகன்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராகுல் டிராவிட் இந்தியா கண்டெடுத்த சிறந்த கிரிக்கெட் வீரர் ஆவார்.டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியென இரண்டிலும் 10,000+ ரன்களை எடுத்த கிரிக்கெட் வீரர்களில் டிராவிட் ஒருவர். 2000 ஆம் ஆண்டுகளில் சேவாக், சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோருடன் டிராவிடும் இந்திய அணிக்கு ஒரு தூணாக இருந்தார். இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும், தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக தனது பணியை தொடர்ந்து வருகிறார்.

ALSO READ  போட்டி தொடங்கும் முன் பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த நியூஸிலாந்து..!

ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட், அவரை போலவே மிகப்பெரிய வீரராக வருவதற்கான அனைத்து அடையாளங்களுடனும் அபாரமாக ஆடி ரன்களை குவித்து வருகிறார்.கர்நாடகாவில் நடந்த அண்டர் 14 மண்டல அளவிலான போட்டியில் வைஸ் பிரசிடண்ட்ஸ் லெவன் அணியில் ஆடிவரும் சமித் டிராவிட், தர்வாத் மண்டல அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

250 பந்தில் 201 ரன்களை குவித்த சமித் டிராவிட், இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 94 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக 295 ரன்களை குவித்தார் சமித் டிராவிட். பேட்டிங்கில் மட்டுமல்லாமல், பவுலிங்கிலும் அபாரமாக செயல்பட்ட சமித் டிராவிட், இரண்டாவது இன்னிங்ஸில் எதிரணியின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மித வேகப்பந்து வீச்சாளரான சமித் டிராவிட், பவுலிங்கிலும் அசத்துகிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடைபெற்றார் லசித் மலிங்கா..!

Admin

மார்ச்சில் தொடங்குகிறது “ஐபிஎல் திருவிழா”

Admin

இரண்டாவது முறையும் இப்படியா?… எப்படியிருக்கிறார் கங்குலி!

naveen santhakumar