இந்தியா- மே.தீவுகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று நடைபெறுகிறது.இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன.
3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டி இன்று கட்டாக்கில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணியும்- மேற்கிந்திய தீவுகள் தீவிரம் காட்டும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் வென்று தொடரை கைப்பற்றினால் தொடர்ச்சியாக 10வது முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றிய சாதனையை இந்திய அணியும், மேற்கிந்திய தீவுகள் வென்றால் 9 தொடர் தோல்விகளுக்கு பிறகு இந்தியாவுடன் தொடரை கைப்பற்றிய சாதனையையும் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.