புளோரிடா :
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் வருகிற ஜூலை 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டது. பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெறும்.
இந்நிலையில், தடகள ஒருங்கிணைப்பு பிரிவு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஊக்க மருந்து சோதனையில் அமெரிக்காவின் பிரையன்னா மெக்நீல், 2-வது முறையாக விதிமீறலில் ஈடுபட்டு உள்ளார் என தெரிய வந்துள்ளது.
இதனால் அவர் 5 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்த தடை உத்தரவு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதியில் இருந்து தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.எனினும் இதனை எதிர்த்து மெக்நீல் விளையாட்டு போட்டிகளுக்கான நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.இதேபோன்று ஊக்க மருந்து சோதனையில் இந்தியாவின் மல்யுத்த வீரர் சுமித் மாலிக் சிக்கியுள்ளார்.இதனால் ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.