தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
காவல் நிலைய வாசலில் உள்ள மரத்தில் காவலர்களின் யூனிஃபார்மை காய வைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது..
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் தன்வந்திரி நகர் காவல் நிலையம் உள்ளது . அங்கு ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ,தலைமை காவலர் என 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தன்வந்திரி நகரின் மையத்தில் இந்த காவல் நிலையம் அமைந்துள்ளதால் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.
இந்நிலையில் தன்வந்திரி நகர் காவல்நிலையத்தின் வாசலில் போலீசார் தங்களது யூனிஃபார்மை அங்குள்ள மரத்தில் காய வைத்து , ஷூக்களையும் தொங்க விட்டுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இவற்றை அகற்றவும், காவல் நிலையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.