தமிழகம்

கோமாவுக்கு சென்ற மனைவி… காத்திருக்கும் கணவன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஈரோட்டில் கோமா நிலைக்கு சென்ற மனைவிக்காக கணவன் காத்திருக்கும் சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டை சேர்ந்த அருணுக்கும், சுதாவுக்கும் செப்டம்பர் மாதம் திருமணம் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. சீனாவில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்த அருண் திருமணத்திற்கு பின் சீனா சென்று தங்குவதற்கு வீடு, விமான டிக்கெட் ஆகிய ஏற்பாடுகளை செய்தார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக சீனா செல்ல 2 நாட்கள் இருந்த போது சுதா, தனது சகோதரனுடன் சென்ற பைக் விபத்தில் சிக்கியது. இதில் அவருக்கு பின் தலையில் அடிபட்டது.

ALSO READ  நாளை ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்:

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 15 நிமிடத்தில் சுயநினைவை இழந்தார். பின் அவருக்கு மூளையில் இரத்தம் உறையாமல் இருக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

ஒருவாரம் கழித்து கண்விழித்த சுதாவிற்கு இதுவரை நினைவு திரும்பவில்லை. அவரது கணவர் வேலையை விட்டு விட்டு பக்கத்தில் இருந்து மனைவியை பார்த்துக்கொள்கிறார். அருண் அழைத்தால் மட்டுமே அவர் திரும்பி பார்க்கிறாராம். இதனால் எப்படியும் தன் மனைவி குணமாகி விடுவார் என்ற நம்பிக்கையில் இருவரின் குடும்பத்தினரும் அனைவரும் காத்திருக்கின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வலுப்பெற்ற டவ்-தே புயல்; திடீர் ஆலோசனையில் முதல்வர் !

News Editor

மக்களே உஷார்; மீண்டும் ஒரு புயல் சின்னம் – அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

naveen santhakumar

மத்திய சிறை; கொலை குற்றவாளி தப்பி ஓட்டம் !

News Editor