ஈரோட்டில் கோமா நிலைக்கு சென்ற மனைவிக்காக கணவன் காத்திருக்கும் சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டை சேர்ந்த அருணுக்கும், சுதாவுக்கும் செப்டம்பர் மாதம் திருமணம் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. சீனாவில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்த அருண் திருமணத்திற்கு பின் சீனா சென்று தங்குவதற்கு வீடு, விமான டிக்கெட் ஆகிய ஏற்பாடுகளை செய்தார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக சீனா செல்ல 2 நாட்கள் இருந்த போது சுதா, தனது சகோதரனுடன் சென்ற பைக் விபத்தில் சிக்கியது. இதில் அவருக்கு பின் தலையில் அடிபட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 15 நிமிடத்தில் சுயநினைவை இழந்தார். பின் அவருக்கு மூளையில் இரத்தம் உறையாமல் இருக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
ஒருவாரம் கழித்து கண்விழித்த சுதாவிற்கு இதுவரை நினைவு திரும்பவில்லை. அவரது கணவர் வேலையை விட்டு விட்டு பக்கத்தில் இருந்து மனைவியை பார்த்துக்கொள்கிறார். அருண் அழைத்தால் மட்டுமே அவர் திரும்பி பார்க்கிறாராம். இதனால் எப்படியும் தன் மனைவி குணமாகி விடுவார் என்ற நம்பிக்கையில் இருவரின் குடும்பத்தினரும் அனைவரும் காத்திருக்கின்றனர்.