தமிழகம் மருத்துவம்

சிறுமியின் வயிற்றில் அரை கிலோ முடி அதிர்ந்து போன மருத்துவர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் வயிற்றில் சுமார் அரை கிலோ முடி ஷாம்பு பாக்கெட்டுகளின் துகள்கள் இருந்ததை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த சிறுமி 7-ம் வகுப்பு படிக்கிறார். இவர் தொடர்ந்து சில காலங்களாக வயிற்று வலி,வாந்தி உணவு உண்ணாமை போன்றவற்றால் அவதி பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் இதனை பரிசோதிக்க சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் மருத்துவர்களின் ஆலோசனை படி சிறுமிக்கு சி.டி ஸ்கேன் பரிசோதனை செய்ததில் அவருக்கு திட வடிவில் கட்டி இருந்தது தெரியவந்துள்ளது.

அக்கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி தற்பொழுது சிறுமி நலமுடன் உள்ளார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ALSO READ  நடிகர் கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி?

கட்டியை பற்றி குடலியல் மருத்துவர் கூறியது சிறுமியின் வயிற்றில் அரைகிலோ அளவில் முடி ஷாம்பு துகள்கள் இருந்தது. இதனை கண்டு நாங்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தோம். தற்பொழுது அதனை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி விட்டோம் என்றார்.

இவ்வாறு நிகழ காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் தாய்மாமன் இறந்துள்ளார். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சிறுமி அவ்வபோது தனது தலைமுடியை பிய்த்து வாய்க்குள் போட்டுள்ளார். மூன்று மாதங்களுக்கு மேல் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. இதனாலேயே சிறுமி வயிற்று வலியால் துடித்துள்ளார் என்று கூறியுள்ளனர்.

ALSO READ  10 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ஐந்து பைசா பிரியாணி- கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் ..!
Image result for மன அழுத்தம்

மன அழுத்தம் என்பது சிறுவர்களை மட்டும் இன்றி பெரிவர்களையும் பாதிக்கும் இதனை பெற்றோர்கள் சரியான நேரத்தில் கவனித்து அவர்களுக்கு தகுந்த ஆலோசனை தரும்படி மருத்துவர்கள் கூறுகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

News Editor

செம்பு வளையலில் தங்க முலாம் பூசி மோசடி:

naveen santhakumar

தஞ்சை மாநகராட்சி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்வு

News Editor