சென்னை அடுத்த தாம்பரம் அருகே சேலையூரில் வசித்து வரும் 40 வயது பெண்மனி ஒருவருக்கு கொரோனா தாக்குதல் அறிகுறிகள் தென்பட்டுள்ளது.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தெற்கு சீனாவில் உள்ள தனது கணவரை பார்த்துவிட்டு விமானம் மூலம் சென்னை வந்த போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் விமான நிலையத்தில் நோய் பரிசோதனையில் போது அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.
இலேசான காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு போதிய வசதிகள் இல்லாததால் அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் ஜெயந்தி கூறுகையில் :
தெற்கு சீனாவின் டாங்வான் (Dongguan) பகுதிக்கு சென்று திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையின் போது வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. தெர்மல் பரிசோதனையின் போது கூட பாதிப்புகான அறிகுறிகள் இல்லை.
இவருக்கு இலேசான காய்ச்சல் ஏற்பட்டதால் அருகிலுள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை அனுகியுள்ளார். அங்கு போதுமான வசதிகள் இல்லாததால் இங்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அவருக்கு இதுவரை கொரோனா விற்கான பாதிப்புகள் தென்படவில்லை. ஆனாலும் இவ்விஷயத்தில் முன்னெச்சரிகை நடவடிக்கையாக மருத்துவர்கள் கண்காணிப்பில் வைத்துள்ளோம் என்றார்.
இதே போல சீனாவிலிருந்து பொங்கலுக்கு முன் திருவண்ணாமலை வந்த என்ஜியரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.