மதுரை;
மதுரையில், பிச்சைக்காரர் ஒருவர், எட்டாவது முறையாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் பூல் பாண்டியன், திருமணம் முடிந்த சில ஆண்டுகளில், வேலை தேடி மும்பைக்கு சென்றார்.
வேலை கிடைக்காத காரணத்தால், பிச்சை எடுக்க துவங்கினார். சில நாட்கள் கழித்து தனது சொந்த ஊருக்கு திரும்பிய அவரை, குடும்பத்தினர் ஒதுக்கினர்.
இதனால், தொடர்ந்து பிச்சை எடுத்தார். செலவு போக மீத பணத்தை, கல்வி நிறுவனங்களுக்கு தேவையான சேர், டேபிள் போன்ற அத்தியாவசிய உபகரணங்கள் சிலவற்றை வாங்க வழங்கியுள்ளார்.
தற்போது, மதுரையில் தங்கியிருக்கும் இவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, ஏற்கனவே, ஏழு முறை தலா, 10 ஆயிரம் ரூபாயை, மதுரை மாவட்ட கலெக்டர் திரு வினய்யிடம் வழங்கியுள்ளார்.
மேலும் எட்டாவது முறையாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
பிச்சைக்காரரின் இத்தகைய நற்செயல் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது ..அதுமட்டுமல்லாது பிச்சைக்காரருக்கு மக்களிடமிருந்து பாராட்டும் கிடைத்துள்ளது