சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சப்படுத்திவருகிறது.
இதுவரையில் 19 நாடுகளில் பரவியதாக கூறப்படும் வைரஸ் இந்தியாவில் கேரளாவில் முதல்முறையாக சீனாவிலிருந்து திரும்பிய ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது.
இதை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டது.
இந்நிலையில் சீனாவிலிருந்து திருவண்ணாமலை திரும்பிய சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கு வைரஸ் தாக்குதல் அறிகுறிகள் தென்பட்டதால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் நோய்க்கு இது வரை 170-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். கொரோனா வைரஸ் உலகில் உள்ள 19 நாடுகளில் பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் நோய்க்கு உலக சுகாதார மையம் ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன.