பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கான சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வெளியூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் தெற்கு ரயில்வே சார்பில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 6 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.அதேபோல் திருநெல்வேலியில் இருந்து இன்று மாலை 6.15 மணியளவில் புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில் இருவழித்தடங்களிலும் கோவில்பட்டி,சாத்தூர்,விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதேபோல் ஜனவரி 12ம் தேதி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.