தமிழகம்

நித்யானந்தா படத்துடன் பேனர் வைத்த திருச்சி வாலிபர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சி அருகே திருமண நிகழ்ச்சியில் நித்யானந்தா படத்துடன் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்ட சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் நித்தியானந்தாவை கர்நாடகா போலீஸ் தேடி வருவதும், அவர் தனக்கு கைலாச தீவில் ஜாலியாக வலம் வருவதும் அனைவரும் அறிந்த செய்தி. ஆனாலும் தினம் தினம் நித்யானந்தா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் திருச்சி அருகே லால்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நித்யானந்தா புகைப்படத்துடன் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ALSO READ  கட்டுப்பாடுகளை மதிக்காத பொதுமக்கள்; இ-பதிவில் திருமணத்தை தூக்கிய தமிழக அரசு !

திருமணத்திற்கு வந்த உறவினர்களும் அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்களும் இந்த பேனரை கண்டு ஆச்சரியமடைந்தனர். நித்யானந்தா படத்துடன் பேனர் வைக்கப்பட்டது ஏன்? என்பதை விளக்கிய மணமகனின் நண்பர்கள், திருமணத்திற்கு வரும் உறவினர்களை வித்தியாசமாக கவர வேண்டும் என நினைத்தோம். அதனால் இணையதளங்களில் யார் அதிக ட்ரெண்டிங்கில் உள்ளனர் என்று தேடிப் பார்த்தபோது நித்தியானந்தா தான் பதிலாக கிடைத்தார் எனவும் தெரிவித்தனர்.

மேலும் அவருடைய கைலாச நாடு எங்கிருக்கிறது என்பது தெரிந்தால் நாங்களும் அங்கு செல்வோம் என்று கூறியபடியே, நித்யானந்தா அடிக்கடி உபயோகப்படுத்தும் நோ சூடு.. நோ சொரணை என்ற வசனத்தையும் இவர்கள் அடிக்கடி தெரிவிக்கின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கவர்னர் பயணத்தின் போது மக்கள் பாதிக்கப்பட கூடாது : கவர்னர் ஆர்.என்.ரவி

News Editor

3 மாத வாடகை ரூ.4.20 லட்சம் வேண்டாம்:வணிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மனிதநேய மருத்துவர்..

naveen santhakumar

30 ஆண்டுகளாக மலை கிராமங்களில் நடந்தே சென்று பணியாற்றிய தபால்காரர்- பெருமை சேர்த்த IAS அதிகாரி… 

naveen santhakumar