தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஓசூர் அருகே பிறந்த குழந்தையை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் மாநகராட்சி அருகேயுள்ள மத்தம் அஹ்ரகாரம் பகுதியிலுள்ள முட்புதரில் பிறந்த குழந்தையின் உடல் கிடப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இறந்த நிலையில் இருந்த குழந்தையின் உடலை அங்கு சுற்றித் திரிந்த நாய்கள் கடித்து குதறியுள்ளது. இதனையடுத்து எஞ்சிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை ஆணா?, பெண்ணா என கண்டறிய முடியாமல் குழம்பிய காவல்துறையினர் குழந்தையின் உடலை முட்புதரில் வீசி சென்றது யார் என விசாரித்து வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.